Pages

Sunday, November 22, 2020

நல்லாச்சி - 9



மந்தையில் மேயச் சென்ற செவலைப்பசு
அந்தி மயங்கியும் வீடடையவில்லை
காடுகரை மேய்ந்ததோ
கால் வழுக்கித்தான் விழுந்ததோ
பயிர் பச்சை கடித்ததோ
பவண்டில்தான் அடைபட்டதோவென
எதிர்படுவோரிடமெல்லாம் 
புலம்பித் தீர்க்கிறாள்
காத்துச்சலித்த நல்லாச்சி
செய்தித்தாளில் 
விளம்பரம் தரலாமென அறிவுறுத்தும்
பட்டணத்துப் பேத்தி அறியாள்
உள்ளூரில் அலமுறையிடுவதும்
பத்திரிகையில் பகிர்வதும்
வெவ்வேறென்றாலும்
பலனொன்றே என்பதையும்
இரண்டொரு நாளில் 
தேடல் தீர்ந்து விடுமென்பதையும்.

0 comments: