Pages

Monday, August 29, 2022

நல்லாச்சி - 35


"இரவும் பகலும் 
எப்படி வருகிறது ஆச்சி"
நல்லாச்சி மடியில் மல்லாக்கப்படுத்துக்கொண்டு
கேட்கிறாள் பேத்தி
"கடவுள் ஊட்ல 
சுச்சு போட்டா பகலு
அமுத்துனா ராவு அவ்வளவுதான்"
பதிலுறுத்தாள் நல்லாச்சி
இருள்பிரியாது நீண்ட
குளிர்கால இரவொன்றில்
பொறுமையிழந்த பேத்தி சொல்கிறாள்
"கடவுள் வீட்லயும்
பீசுகட்டய புடுங்கிட்டாவோ போலுக்கு
பில்லு கட்டலயோ"
ஞேயென விழிக்கிறாள் நல்லாச்சி
வெளிச்சம் வரக் காத்திருக்கிறாள் பேத்தி.

0 comments: