Pages

Wednesday, March 1, 2023

எல்லாத்துறையிலும் ஒரே கடல்..


எந்தக்குளத்தில் பூத்தாலென்ன
எல்லாத்தாமரைக்கும்
ஒரே மணம்
எந்த உலையில் வெந்தாலென்ன
எல்லா அரிசியிலும்
ஒன்று போல்தான் பசி தீர்கிறது
எல்லாத்தாய்களும் ஒருவளே
குழந்தையின் பசி உணர்வதில்
எந்தத்துறையில் முங்கினாலென்ன
எல்லாத்துறையிலும் ஒரே கடல்
எல்லாச்சாளரங்களின் வழியும்
நுழைகிறது காற்று
உன் என் வியர்வையை ஆற்ற
எல்லாமும் சேருமிடம்
ஒரு புள்ளியில்
பரந்து பிரிவதும் அங்கிருந்தே
பலவற்றிலிருந்து ஒடுங்கியிணைந்தவையெலாம்
சிதறிப்பறக்கின்றன
ஒன்றுதான் ஒன்றுதான் என்றபடி.

டிஸ்கி: கவிதையை வெளியிட்ட திண்ணைக்கு நன்றி.



0 comments: