Pages

Monday, March 13, 2023

தேடல்

             
விழித்திருக்கும்
கைக்குழந்தைக்குத் துணையாய்
கொட்டக்கொட்ட
தானும் விழித்திருக்கிறார்
நோய்மை கிழித்துப்போட்ட ஒருவர்
புறப்புலன் மங்கி 
அகப்புலன் தெளிவின்றி
சுய கட்டுப்பாடுமற்ற உடலர் இருவரில்
வந்த பாதை நினைவில்லை ஒருவருக்கு
போகும் பாதையோ 
தெரியவில்லை இன்னொருவருக்கு
அகமும் புலனுமற்ற ஏதோவொரு
மாயவெளியில்
அளவளாவும் இரு ஆன்மாக்களும்
தத்தம் ரேகைகளை
அங்கே பரிமாறிக்கொண்டு பிரிகின்றன
ரேகையைப் பத்திரப்படுத்தும் பொருட்டு
கால் கட்டைவிரலை
வாயில் வைத்துக்கொள்கிறது குழந்தை
கையை இறுக்கிக்கொள்கிறார் வயதானவர்
ஒருவரையொருவர் அர்த்தத்துடன் நோக்கி
பொக்கைச்சிரிப்பைச் சிந்துகின்றனர் இருவரும்
அப்பிக்கிடக்கும் காரிருளில்
விரல்களைத்தேடுகின்றன ரேகைகள்.

கவிதையை வெளியிட்ட திண்ணைக்கு நன்றி.

0 comments: