Pages

Saturday, April 30, 2022

பிள்ளைத்தனம்..

ஆனாலும் உனக்குக் கல்மனசுதான்
விசும்பியது என் யானை
என் மேல் பாசமற்றுப்போனாய்
என கூசாமல் குற்றமுரைத்தது
வெள்ளிக்கொலுசுகளும் கழுத்து மணிகளும்
சப்திக்க
குலுங்கிக்குலுங்கி அழுதது
வராத கண்ணீரையும் துளிர்க்காத வியர்வையையும்
ஒற்றிக்கொண்டு
கலையாத முகப்பூச்சைக்
கவனத்துடன் நோக்கிக்கொண்டது
என்னதான் பிரச்சினையுனக்கு?
சற்றே எரிச்சல் எட்டிப்பார்த்தது எனக்குள்
கேளடா மானிடா..
உன் வீட்டில் 
பூனைக்கென தனி வாயில்
உன் படுக்கையில் அதற்கோர் இடம்
அல்லும் பகலும் கைகளில் சுமக்கிறாய்
எனக்கென ஏது?
என்னை ஒருநாளும் சுமந்ததில்லை நீ
கட்டில் இல்லாவிடில் போகிறது
ஒரு தொட்டிலாவது தரலாம் நீ
மீசை முறுக்கித்திரியும்
உன் பூனையின் முன்
மனமொடுங்கி வாழாமல்
மானத்துடன் வாழ விடு என்றது
உருவத்தால் யானையாயிருந்த அப்பூனை.

0 comments: