Pages

Friday, April 15, 2022

நல்லாச்சி - 30


பழங்கள் பலகாரங்கள் படையலிட்டு
பூவும் தூபமும் கமழ
பூஜித்துக்கொண்டிருக்கிறாள் நல்லாச்சி
கிண்கிணிச் சதங்கை குலுங்க
கை பூட்டிய வளையல்கள் பேச
பட்டும் பூவும் சாற்றி
கைகூப்பி பிரார்த்தித்து நிற்கிறது
பேத்தியாய் வந்த தெய்வம்
ஒரு கண் படைத்தவன்மேல்
மனசெல்லாம் படையல்மேல்
பாயசமும் நல்திராட்சையும்
கற்கண்டும் செவ்வாழையும்
வேண்டுவன எல்லாம் நீ கொள்
வடைகளை மட்டும் எனக்கே தா.

0 comments: