Pages

Friday, April 22, 2022

இவ்விடம் நல்ல பூனை கிடைக்கும்


என் பூனை இரக்கசுபாவி
உறிப்பாலைத் திருடுவதில்லை
கறிச்சட்டிகளை உருட்டுவதில்லை
என் மதியஉறக்கம் கலையாவண்ணம்
காலடியில் சுருண்டு கொள்ளும்
என்னவொன்று
தொட்டியிலிருக்கும் மீன்கள்தான்
அவ்வப்போது
காணாமற் போய்விடுகின்றன
மீசை வைத்த மீனை
என் பூனை
குரோதத்துடன் பார்த்தபோதே
புரிந்திருக்க வேண்டுமெனக்கு
என் கண்ணிலிருந்து அதன் நகங்கள்
ரத்தம் வழியவிட்டபோதும்
நானே குற்றவாளியென ஆவதில்
அதற்குப் பெரும்மகிழ்ச்சி
என் பூனை
உடனடியாகக் கொல்லாது
ஏனெனில்
அது இரக்கசுபாவி.

0 comments: